வியாழன், 21 ஜனவரி, 2010

கர்கரேயைக் கொன்றது யார்?- நிறைவுப் பாகம்

இந்துத்வ (பார்ப்பன) ஆய்வகமே மகாராட்டிரம்தான்
2002 குஜராத் இனப்படுகொலைச் சம்பவங்களுக்குப் பிறகு, குஜராத் மாநிலத்தை இந்துத்வ (பார்ப்பனிய) ஆய்வகம் என்றே ஊடகங்கள் குறிக்கின்றன। குஜராத்தைப் பொறுத்தமட்டில் ஆய்வகம் என்பதனை விட பரிசோதனைச் சாலை என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். 1893 முதலே மகாராட்டிராதான் இந்துத்வ ஆய்வுச் சாலை ஆகும்.
பார்ப்பனர்களை தவிர்த்து விட்டு, இந்துக்களையும் முசுலிம்களையும் மோதவிட்டு பார்ப்பன மேலாதிக்கத்தையும் பிற ஜாதியரைக் கீழ் நிலையில் வைத்திருக்கும் செயலையும் எப்படித் திட்டமிட்டுச் செயல்படுத்துவது என்பது பற்றி மகாராட்டிரப் பார்ப்பனர்கள் ஆய்வுப் பொருளாக வைத்துக் கொண்டனர்। இத்தகைய ஆய்வுப் பணியைச் செய்து, பிற மாநிலங்களில் அதனைப் பரிசோதனை செய்து பார்த்ததன் விளைவுதான் - பாபர் மசூதி இடித்ததும் குஜராத் இனப்படுகொலையும்! இந்தச் சம்பவங்களில் எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். பார்ப்பனர்களைத் தவிர.
1960_களில் சிவசேனையில் திட்டமிட்டு நுழைக்கப்பட்ட பார்ப்பனரான மனோகர் ஜோஷி, பின்னாள்களில் மகாராட்டிராவின் முதலமைச்சராக ஆனார்। மகாராட்டிரத்தை முதல் இந்து மாநிலமாக ஆக்கிக் காட்டுகிறேன் என்று சவால் விட்டுக் கூறியவர். இது தொடர்பாக பம்பாய் உயர்நீதி மன்றத்தில் தேர்தல் வழக்கு கூடப் பதிவாகி மனோகர் ஜோஷியின் தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளிக்கப் பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் உறுதியளித்துள்ள மதச்சார்பின்மைக்கு விரோதமாக, வாக்குகள் சேகரிப்பதற்காக இந்து ராஷ்ட்ரம் அமைப்பேன் எனக் கூறியது தவறு எனக் கூறியது உயர்நீதிமன்றம். ஆனால் உச்சநீதிமன்றமோ 1996 இல் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நிராகரித்துத் தீர்ப்பளித்தது. இந்து மாநிலம் அமைப்பேன் என்று பேசியது மத அடிப்படையில் வாக்கு கோரியதாக ஆகாது என நாங்கள் கருதுகிறோம் எனக் கூறியது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம் 1996 இல் இந்துத்வா பற்றி வழங்கிய சான்றிதழ் அரசியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது। தாங்கள் செய்து வரும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பித்துக் கொள்ள சங்பரிவாரங்கள் இதனை மேற்கோள் காட்டி வருகின்றன. 1996 ஆம் ஆண்டைய இந்துத்வா பற்றிய இந்தத் தீர்ப்பை சட்டப்படி சமாதியாக்க அரசியலில் ஒன்றுபட்ட கருத்து உருவாக்கிட இதுவே சரியான தருணம் ஆகும் என்று ‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டில் (டில்லி) 24।2।2009 இல் சட்ட விமர்சகர் மனோஜ் மித்ரா எழுதியுள்ளார்।மித்ராவின் அறிவுரையை, அரசியல் கட்சிகள் எந்த அளவுக்குத் தீவிரமாகக் கருதுகின்றன என்பதை எதிர்காலம்தான் கூறவேண்டும்।
நான் வலியுறுத்த விரும்புவதெல்லாம் - மகாராட்டிர பார்ப்பனியர்கள் எல்லா வகுப்பு மோதல்களிலும் கலவரங்களிலும் பின்னணியில் இருந்து தூண்டிவிட்டு அம்மாநிலத்தை இந்துத்வாவின் ஆய்வகமாக ஆக்கிவிட்டனர் என்பதுதான்.எளிதில் வசப்படுகிற வகுப்புவாதச் சூழ்நிலை நிலவினாலும் கூட, குஜராத் போல மகாராட்டிரா மாறவில்லை என்றால், அதற்கு முழுகாரணமும் அம்மாநிலத்தில் தோன்றியுள்ள சமூகச் சீர்திருத்த இயக்கங்களையே சாரும். மாநிலத்தில் இருந்த அறிஞர்களும் ஞானிகளும் வளர்த்த உணர்வு குறைந்து போய் இருந்தாலும் மகாராட்டிராவின் காவல்துறை (பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும்) வகுப்பு மோதல்கள் பற்றி மிகவும் விழிப்புடன் பணியாற்றுவதும் காரணம்.
பார்ப்பனியர்களைக் கண்டிக்க அரசியல் தலைவர்களின்
அச்சம்
பிறமாநிலங்களில், பார்ப்பனர்களை எதிர் கொண்டு விமர்சித்துத் தாக்குதல் தொடுக்கும் தலைவர்களைப் போன்று மகாராட்டிரத்தில் அரசியல் தலைவர் ஒருவர் கூடக் கிடையாது என்பதும் ஒரு முரண்தான்। பார்ப்பனர்களால் வீழ்த்தப்பட்ட அரசியல் தலைவர்களின் எலும்புக் கூடுகளை அடுக்கி வைத்துக் கொண்டு, எதிர்ப்பவர்களது நிலை இதுதான் எனஅச்சுறுத்தும் ஊடகங்களின் துணையும் பார்ப்பனர்களுக்கு இருப்பதால் மகாராட்டிர அரசியல் தலைவர்கள் எவ்வளவு சக்தி வாய்ந்த பெரிய தலைவர்களாக இருந்தாலும் பார்ப்பனர்களை எதிர்க்க அஞ்சுகின்றனர்।
தங்கள் எதிர்கால அரசியலுக்கு ஊடகங்களின் இருட்டடிப்பு பாதகமாக அமைந்துவிடும் எனும் அச்சத்தின் காரணமாக, இரண்டாம், மூன்றாம் நிலை அரசியல் தலைவர்களும் பார்ப்பனர்களை எதிர்க்கப் பயப்படுகின்றனர். இதன் விளைவு என்னவென்றால், பார்ப்பனர்களின் கொடிய வன்செயல்கள் கட்டுப்படுத்தப்படாமல் மாநிலத்தில் அதிகமாகி வருகின்றன.